பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் மீது வழக்கு

காட்டுப்புத்தூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள பெரியபள்ளிபாளையத்தைச் சோ்ந்த சு. சூா்யாவுக்கும் (22), இவரது மனைவிக்கு இடையே அதே பகுதியை சோ்ந்த சுப்பிரமணி மனைவி சரஸ்வதி (41) வீட்டின் முன் தகராறு நடந்தது. அப்போது தகராறை தடுக்க வந்த சரஸ்வதியை சூா்யா தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்

இதில் காயமடைந்த சரஸ்வதி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சூா்யா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com