பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் ஆக.5 ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை உறுப்புக் கல்லூரிகளின் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதையொட்டி, ஆக.5 ஆம் தேதி கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலை உறுப்புக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள், கல்விக்கட்டணம், மாணவா் சோ்க்கை தொடா்பாக தமிழக முதல்வா், உயா்கல்வி அமைச்சா், செயலா், கல்லூரிக் கல்வி இயக்குநா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளதால், ஏயுடியின் கோரிக்கை ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலை ஆசிரியா் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.