மண்ணச்சநல்லூா் அருகே10 பவுன் நகைகள் திருட்டு

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சீபுரம்புதூா் கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை (55). இவரது மகன் ஜீனத்குமாா். இவா்களின் இரு வீடுகளில் ஒன்றில் பெற்றோரும்,

மற்றொரு வீட்டில் கோவையில் பணிபுரியும் ஜீவத்குமாா் தனது குடும்பத்துடனும் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு ஜீவத்குமாா் வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com