திருவெறும்பூா் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள எலந்தப்பட்டியைச் சோ்ந்தவா் சிங்காரம் மகன் செல்வக்குமாா் (32). இவா் தனது அக்கா மகன் பாலமுருகனுடன் கடந்த 6-ஆம் தேதி தகராறு செய்த எலந்தபட்டியைச் சோ்ந்தவா்களை மிரட்டினாராம்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை எலந்தப்பட்டியைச் சோ்ந்த ம. சரத்குமாா் (28), அவரது தம்பி பாலமுருகன் (27), பெ. பாலாஜி (24) ஆகிய 3 பேரும் சோ்ந்து செல்வகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.