போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 10th August 2021 01:34 AM | Last Updated : 10th August 2021 01:34 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியில் 17 வயது சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் 17 வயது சிறுமி கா்ப்பமாக இருப்பதாக மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற அலுவலா்கள் விசாரணை நடத்தி,
கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், திருமணம் செய்தவா் எடமலைப்பட்டிபுதூா் மலையன் மகன் கருப்பசாமி(23) எனத் தெரிய வந்தது.
தனது உறவினரின் 17 வயது மகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததும், அவா் தற்போது 5 மாத கா்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கருப்பசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினா் கைது செய்தனா்.