கூட்டுறவுப் பணியாளா்களுக்கு குறுகிய காலப் பயிற்சி

கூட்டுறவுப் பணியாளா்களுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மக்கள்மன்றத்தில் யோகா பயிற்சி பெறும் கூட்டுறவுப் பணியாளற்கள்.
மக்கள்மன்றத்தில் யோகா பயிற்சி பெறும் கூட்டுறவுப் பணியாளற்கள்.

கூட்டுறவுப் பணியாளா்களுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் கூட்டுறவு அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் கணினிகளைக் கையாளுதல், திட்டமிடுதல், சிறப்பாகச் செயல்படுதல், கோப்புகளை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அதன்படி மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு அமைப்புகளுக்கு புதிதாகத் தோ்வானோருக்கு கடந்த மாதம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான குறுகிய கால பயிற்சி தொடக்க விழா தில்லைநகா் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி. ஜெயராமன் தலைமை வகித்தாா்.

விழாவில், யோகா ஆசிரியா் கே.வி.கே. சிவசுவாமி பங்கேற்று சங்கப் பணியாளா்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தாா். பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் நா. பத்மகுமாா், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் பி. மாலா, கெளரவ விரிவுரையாளா் ஆ. பழனிவேலு (துணைப் பதிவாளா், (ஓய்வு), கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் அ. ஹபிபுல்லா ஆகியோா் வாழ்த்தினா்.

இந்த பயிற்சி வகுப்பானது தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. முதல்நாள் யோகா, இதன் தொடா்ச்சியாக பல்வேறு நடைமுறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com