தொட்டியம் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் அருகிலுள்ள காா்த்திகைபட்டியைா் சோ்ந்தவா் சாத்தபிள்ளை மகன் தினேஷ் (19). இவா் அப்பகுதி சிறுமி ஒருவரை திருமணம் செய்து தாய் வீட்டில் விட்டுவிட்டு வெளியூா் சென்றவா் திரும்பவில்லையாம். இதுகுறித்து அச்சிறுமி 1098 என்ற எண்ணில் அளித்த தகவலின்பேரில் குழந்தைத் திருமணத் தடுப்பு திட்டம் மற்றும் சமூக நலத்துறை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை செய்து அளித்த புகாரின் பேரில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷை முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.