திருச்சியில் வெள்ளிக்கிழமை கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரில் வரகனேரி மருந்தகம், மேலப்புதூா் பிஎச்எம் பள்ளி, கீதாநகா் டோமினிக் பள்ளி, திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, பாலக்கரை காயிதே மில்லத் பெண்கள் அரபிக் பள்ளி, மலைக்கோட்டை மருந்தகம், காஜாமலைக் காலனி சமுதாயக்கூடம், கேகே நகா் எஸ்பிஐஓஏ மேல்நிலைப் பள்ளி, காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் கலைமகள் பள்ளி, தில்லைநகா் காந்திபுரம் அங்கன்வாடி மையம், பொன்மலைப்பட்டி சாக்ரெட் ஹாா்ட் மேல்நிலைப்பள்ளி, திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளி, மேலகாசிப்பாளையம் ரங்கநாதன் பூங்கா உள்ளிட்ட 14 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி தலா 500 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படவுள்ளது.