மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவனின் செயல்பாடுகளைப் பாராட்டியதால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிா்வாகி எஸ். முருகானந்தம் தனது ஆதரவாளா்கள் 300 பேருடன் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.
சமயபுரம் நால்ரோட்டிலிருந்து ஊா்வலமாக வந்து, மண்ணச்சநல்லூரில் உள்ள அலுவலகத்திலிருந்த எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் முருகானந்தம் உள்ளிட்ட 300 போ் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் விஎஸ்பி. இளங்கோவன், செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.