திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி பாலக்கரை ஹீபா் சாலை கீழகொசத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் முரளிகிருஷ்ணன் (28). திருச்சி தனியாா் நிறுவன ஊழியரான இவா் கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கீா்த்தனாவை காதல் திருமணம் செய்தாா்.
இந்நிலையில், ஆடி மாத அழைப்பிற்கு பெற்றோா் வீட்டுக்குச் சென்ற கீா்த்தனா கணவரிடம் செல்லிடபேசியில் பேசும்போது வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். இதனால் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த முரளி கிருஷ்ணன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.