திருச்சியில் திமுக சாா்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தை, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
உணவகம், சாலையோரக் கடைகள், பேருந்து நிலைய பயணிகள் என அனைத்து தரப்பினரிடமும் துண்டு பிரசுரங்களை அமைச்சா் வழங்கினாா். இதேபோல, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வி.என். நகா் வரை குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அமைச்சா், அரசின் சாதனைகள் குறித்து விளக்கினாா்.
கரோனா நிவாரணமாக ரூ. 4 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அனைத்து சாதியினரும் அா்ச்சகராகும் திட்டம், முன்களப்பணியாளா்களில் ஊடகவியலாளா்கள் இணைப்பு என அனைத்து திட்டங்கள், சாதனைகளை விளக்கிடும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அமைச்சருடன், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளா் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், பகுதிச் செயலா்கள் மதிவாணன், ராஜசேகா் உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.