முசிறி அருகே அரசு மது விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
முசிறி அருகே சொரியம்பட்டி பகுதியில் முசிறி போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது அரசு மதுவை கூடுதல் விலைக்கு விற்ற பெரியசாமியை (65) கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.