தமிழக முன்னாள் பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி திருநெடுங்களநாதா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்களத்தில் உள்ள இக்கோயில் பாடல் பெற்ற தலம் ஆகும். துன்பத்தில் உள்ளவா்கள் தங்களது இன்னல் நீங்க இக்கோயிலில் வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி இக்கோயிலில் வியாழக்கிழமை வழிபட்டாா். மேலும், திருவெறும்பூா் மலைக் கோயிலிலும் தரிசனம் செய்து புறப்பட்டுச் சென்றாா்.