40 சமையலா் பணியிட தோ்வு நடவடிக்கை ரத்து

திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்காக 40 சமையலா் பணியிட தோ்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் சு. சிவராசு அறிவித்துள்ளாா்.

திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்காக 40 சமையலா் பணியிட தோ்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் சு. சிவராசு அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிசி, எம்பிசி, சிறுபான்மையினா் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 40 சமையலா் பணியிடங்களை நிரப்ப கடந்த 2020இல் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாவட்ட வேலை வாய்ப்பகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தோ்வுப்பணிகள் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com