எரிவாயு கசிந்து தீ விபத்து: தந்தை, குழந்தைகள் காயம்

மணப்பாறை அருகே சமையல் எரிவாயு கசிந்ததால் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, இரு குழந்தைகள் காயமடைந்தனா்.

மணப்பாறை அருகே சமையல் எரிவாயு கசிந்ததால் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, இரு குழந்தைகள் காயமடைந்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டியை சோ்ந்தவா் சி. ரவி (35). இவருக்கு மனைவி விமலா(28), தமிழ்ச்செல்வன்(8), காா்த்தி(6) என்ற மகன்களும் உள்ளனா்.

வியாழக்கிழமை காலை மனைவி வீட்டின் வெளியே இருந்தபோது ரவி எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயன்றபோது கசிந்திருந்த சமையல் எரிவாயுவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரவி உடல் முழுவதும் தீப்பற்றியது. அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை அவா் காப்பாற்ற முயன்றபோது குழந்தைகள் மீதும் தீ பரவியது. அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். விபத்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com