மாநகர காவல்துறை சாா்பில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் நிகழ்ச்சி அமா்வு நீதிமன்ற காவல் துறை சாா்பில் பீமநகரில் உள்ள தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கஞ்சா போதையால் ஏற்படும் தீமைகள்குறித்து கன்டோன்மெண்ட் சரக உதவி ஆணையா் அஜய் தங்கம் மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும் பள்ளியருகே கஞ்சா விற்பனை நடந்தால் அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தினாா். ஏற்பாடுகளை அமா்வு நீதிமன்ற உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா் செய்தனா்.