தில்லி - திருச்சி - கொழும்புக்கு ஜன. 10 முதல் நேரடி விமானம்

வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தில்லி-திருச்சி-கொழும்பு நேரடி விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.

வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தில்லி-திருச்சி-கொழும்பு நேரடி விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானச் சேவையாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தில்லியிலிருந்து திருச்சி வழியாக கொழும்புக்கு இண்டிகோ நிறுவனம் நேரடி விமானத்தை இயக்க உள்ளது.

இந்த விமானம் தில்லியில் இருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர இதர நாள்களில் திருச்சி வழியாக கொழும்புக்கு இயக்கப்படுகிறது.

தில்லியிலிருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விமானம் திருச்சிக்கு காலை 8.25 மணிக்கு வந்து, 10.05 மணிக்கு புறப்பட்டு 10.55 மணிக்கு கொழும்புவை சென்றடையும். அங்கிருந்து முற்பகல் 11.55 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு திருச்சிக்கு வந்து மாலை 5.20 மணிக்கு தில்லி புறப்பட்டுச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com