ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூரில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதையொட்டி மாநகர காவல்துறையினா் எடமலைப்பட்டிபுதூா் கோரையாற்றுப் பாலத்தையொட்டியுள்ள சோதனைச் சாவடியை மாற்றிவிட்டு மாநகர எல்லையான பஞ்சப்பூரில் உதவி காவல் நிலையம் அமைக்க உள்ளனா்.
இதன் முதல்கட்டமாக சோதனைச் சாவடி மற்றும் புறக்காவல் நிலையம் அமையும் இடத்தை மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். புகரில் இருந்து வரும் பேருந்துகள் மாநகரில் நுழையாமல் இருக்க அமைக்கப்படும் இந்தப் புறக்காவல் நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.