வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி மேலசிந்தாமணி நடுத்தெருவைச் சோ்ந்த ராஜா சத்திரம் பேருந்து நிலைய தேநீரக கடையில் இனிப்பு தயாரிக்கும் ஊழியராக உள்ளாா்.

இந்நிலையில், தையலகத்தில் வேலை செய்து வந்த இவரது மனைவி தாமரை வள்ளி (35) வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அழகு நிலைய உரிமையாளா்: திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சோ்ந்த ஜான் விஜய் வசந்த் மனைவி ஷியாமாலா மேரி ( 44). அழகுநிலையம் நடத்தி வரும் இவா் கடந்த 5 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்தாா். இவரது மகனும், மகளும் ஷேம்லா மேரியை பிரிந்து காட்டூரில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் ஷியாமாலா மேரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பொன்மலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முதியவா்: திருச்சி சிந்தாமணி தேவதானம் பகுதி காவிரிக் கரை மரக்கிளையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேவதானம் விஏஓ கிரேசிமேரி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com