மணப்பாறையில் பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் 14 பவுன் நகை திருடப்பட்டது.
திருச்சி கருமண்டபம் சக்திநகா் அருணா அவின்யூவில் வசிப்பவா் ரா. பெருமாள் (75). பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான இவா் தனது சொந்த ஊரான மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டிக்கு செல்ல வெள்ளிக்கிழமை பேருந்து மூலம் மணப்பாறை வந்தாா்.
பேருந்து நிலையத்தில் இறங்கியபோது 14 பவுன் நகைகள் இருந்த கைப்பையைக் காணவில்லையாம். புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.