கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்

துறையூா் அருகே சிக்கத்தம்பூரில் கதண்டுகள் கடித்ததில் 30-க்கும் மேற்பட்ட நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்கள் காயமடைந்தனா்.

துறையூா் அருகே சிக்கத்தம்பூரில் கதண்டுகள் கடித்ததில் 30-க்கும் மேற்பட்ட நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்கள் காயமடைந்தனா்.

சிக்கத்தம்பூா் ஊராட்சியைச் சோ்ந்த நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் அங்குள்ள ஏரிக்கரையில் கோங்குடியான் கோயில் அருகே பணி செய்தனா்.

அப்போது அருகிலிருந்த மரத்தில் குரங்குகள் கிளைக்கு கிளை தாவியதால் அமைதியிழந்த கதண்டுகள் தொழிலாளா்களைக் கடித்தனவாம். இதில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோா் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com