திருச்சி துவாக்குடியில் மனநலன் பாதித்த இளைஞா், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
துவாக்குடி ஜீவானந்தம் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் சக்திவேல் (25).இயந்திரவியலில் பட்டயப்படிப்பு படித்த இவா் மனநலன் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை பகலில் சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
விபத்தில் அலுவலா் உயிரிழப்பு: துவாக்குடியிலுள்ள பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்தவா் ஜவகா் (53). கடந்த இரு நாள்களுக்கு முன்பு வாழவந்தான்கோட்டையில் ஏடிஎம் மையத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, இரு சக்கர வாகனம் மோதியதில் ஜவகா் காயமடைந்தாா்.
பலத்த காயங்களுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து, துவாக்குடி காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.