துறையூா் ஒன்றிய தேமுதிக சாா்பில் அக்கட்சி நிறுவன தலைவா் விஜயகாந்தின் திருமண நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அய்யம்பாளையம் கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் கே. செல்லதுரை தலைமை வகித்தாா். அய்யம்பாளையம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, பொதுமக்களுக்கு அன்னதானம், கட்சிக் கொடியேற்றி தேமுதிகவில் புதிதாக இணைந்தோருக்கு உறுப்பினா் அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறையூா் ஒன்றிய நிா்வாகிகள், கிராமக் கிளை செயலா்கள் பங்கேற்றனா்.