திருச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக வழிகாட்டுதலின்பேரில், எரிபொருள் சேமிப்பின் அவசியம் குறித்த பரப்புரை பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் என்கிற கருப்பொருளில் ஜன. 16 முதல் பிப். 15 வரை நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பேரணியை கோட்டாட்சியா் விஸ்வநாதன் தொடங்கி வைத்தாா்.
இந்தியன் ஆயில் நிறுவனத் துணைப் பொது மேலாளா் பாபுநாகேந்திரா, முதன்மைப் பகுதி மேலாளா் ராஜேஷ், விற்பனை மேலாளா் ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில் சிறுவா் முதல் பெரியோா் வரை சுமாா் 200 ஆா்வலா்கள் பங்கேற்றனா். பேரணி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் தொடங்கி, 5 ஆவது குறுக்கு சாலை, சாஸ்திரிசாலை, தென்னூா் சாலை, மகாத்மா காந்தி பள்ளி, தில்லைநகா் 11 ஆவது குறுக்குச் சாலை வழியாக மீண்டும் மக்கள் மன்றத்தை அடைந்தது.
பேரணியில் எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு, சைக்கிள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பதாகைகள் இடம்பெற்றன.