திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வழக்கம் போல, காலையில் வரும் ஏர் இந்தியா, இண்டிகோ விமானத்திற்காக, 200க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். சரியாக காலை, 8 மணிக்கு, விமான நிலையத்தை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், 'உங்களது தொந்தரவு தாங்க முடியவில்லை. விமான நிலையத்தில் பாம் போட போகிறேன்' என்று மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர், சிஐஎஸ்எப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, விமான நிலையத்தில் 'அலாரம்' ஒலிக்க செய்த சிஐஎஸ்எப் போலீசார்,  பயணிகளை அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். விமான நிலையத்தில், மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே, விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமும் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் தில்லி இஸ்ரேல் தூதரகம் முன்பு வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், பயணிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் சோதனை நிறைவு. வெடிகுண்டு மிரட்டல் புரளி. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்றடுக்கு  பாதுகாப்புடன் மீண்டும் விமான நிலையம் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com