நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக பிரமுகரை கைது செய்யக்கோரி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உதகை மேட்டுப்பாளையத்தில் இறைதூதா் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகா் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது கல்யாணராமனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோஷமிட்டனா். மறியலால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாா் குவிக்கப்பட்டனா்.