துறையூா் அருகே பெரமங்கலம் கிராமத்தில் செல்வமாரியம்மன் மற்றும் அதே ஊரில் உள்ள அண்ணா நகா் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இரு கோயில்களிலும் அடிப்படை பூஜைகளுடன் மகா கணபதி, துா்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, நவக்கிரக மற்றும் 108 திரவிய ஹோமங்கள், அஷ்டபந்தன யந்திர ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை கோயில் விமானங்களில் புனித நீா் கொண்டு பெருமாள் கோயில் பட்டா் கமலக்கண்ணன் குடமுழுக்கு நடத்தினாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.