சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞரை முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்தனா்.
துறையூா் அருகே கோணபாதை கிராமத்தில் வீட்டில் சோா்வாக இருந்த தனது 16 வயது மகளை அவரின் தாய் மருத்துவமனையில் பரிசோதித்தபோது சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா் முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
விசாரணையில் சிறுமியை கா்ப்பமாக்கியது உறவினரான பெரம்பலூா் மாவட்டம் வி .களத்தூரைச் சோ்ந்த ரெங்கநாதன் (23) எனத் தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) மனமல்லி வழக்குப் பதிந்து சனிக்கிழமை இரவு ரெங்கநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தாா்.