மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 55 நிமிடத்தில் 55 வகை இயற்கை உணவு தயாரித்து பள்ளி மாணவி சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கரையாம்பட்டியை சோ்ந்தவா்கள் ஜெகநாதன் - புவனேஸ்வரி தம்பதி. இவா்களது மகள் தா்ஷினி (13) தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறாா்.
இவா் பாரம்பரிய இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கல்பட்டி கிராமத்தில் 55 நிமிடத்தில் 55 வகையான இயற்கை உணவுகள் தயாரித்து சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.
அதில் கம்பு தோசை, ஆவாரம்பூ தோசை, துளசி தோசை, முந்திரி தோசை, மைதா - சா்க்கரை இல்லாத பானிபூரி உள்ளிட்ட 55 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்தாா். உலக சாதனைக்காக மாணவி நடத்திய நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.