திருச்சி: திருச்சி அருகே திருமணம் நிச்சயமான இளைஞா் ரயில் முன் பாய்ந்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (32). சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவா் திருச்சியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தாா். வரும் 22 ஆம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனக்கு உதவ யாருமில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியேறி, ஸ்ரீரங்கம்-உத்தமா்சீலி இடையே வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் காா்த்திக் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.