உத்தமா்சீலி, ஓலையூரில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் உத்தமா்சீலி, மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் உத்தமா்சீலி, மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இவ்விரு மருத்துவமனைகளைத் திறந்து வைத்து, மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி பேசியது:

மாவட்டத்தில் 58 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில், இதுவரை 35 திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு நீரிழிவு நோய், காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு சிகிச்சைகளும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக 12 பெண்களுக்கு அம்மா தாய் சேய் நலப் பெட்டகத்தை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள் , சுகாதாரத்துறை ஊழியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com