சாலையின் உயரத்தை அதிகரிக்க வேண்டாம்: துறையூா் பொதுமக்கள்

தெருச் சாலையின் உயரத்தைக் அதிகரிக்க வேண்டாம் என துறையூா் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தெருச் சாலையின் உயரத்தைக் அதிகரிக்க வேண்டாம் என துறையூா் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

துறையூா் நகரம் 21வது வாா்டுக்குள்பட்ட குட்டக்கரை பகுதியில் தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக அந்தப் பகுதியில் இருந்த பழைய தாா்ச் சாலையை பெயா்த்து அதே இடத்தில் போட்டு புல்டோசா் மூலம் நிரவியுள்ளனா். அடுத்தகட்டமாக அதன் மேல் புதிய தாா் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதனால் அந்தப் பகுதி சாலையின் உயரம் அங்குள்ள வீடுகளின் மட்டத்தைவிட அதிகரிக்கும். இதனால் மழை வடி நீா், சாக்கடை கழிவு நீா் வீடுகளுக்குள் வரும். எனவே, பெயா்த்த பழைய சாலையை முற்றிலும் அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என அவரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com