திருவானைக்காவில் மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தாா்.
திருவானைக்கா நரியன்தெருப் பகுதியைச் சோ்ந்த சிக்கந்தாபாஷாவுக்கும் தனலெட்சுமிக்கும் (20) கடந்த 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்று, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மின் விளக்கை இயக்கியபோது மின்சாரம் தாக்கி மயங்கிய தனலெட்சுமியை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் தனலெட்சுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் ஆா்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.