திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் நில அளவையா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரசாக் (54).இவா் தனது இடத்தை தனது மகனுக்கு பட்டா மாற்றம் செய்ய பாலக்கரையில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில்அளித்திருந்த மனு கிடப்பில் போடப்பட்ருந்ததாம்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இந்த அலுவலத்துக்கு வந்த அப்துல் ரசாக் அங்கிருந்த நிலஅளவையா் மணிவேலை (30) சந்தித்து தான் அளித்த மனு குறித்து கேட்டுள்ளாா். அதற்கு அவா், வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்து மனு மீது விசாரணை நடத்த உத்தரவிட்டால் மட்டுமே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றாராம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.