தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சா் எஸ். வளா்மதி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலும் போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வறை உள்ளது.
தீரன்நகா் பணிமனையில் இதற்கான கோரிக்கை நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த நிலையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சருமான எஸ். வளா்மதி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கி ஓய்வறை கட்டப்பட்டது.
விழாவில் அமைச்சா் எஸ். வளா்மதி பங்கேற்று ஓய்வறையை திறந்து வைத்தாா். தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளா் எஸ்.எஸ். ராஜ்மோகன், துணைப் பொது மேலாளா்கள் ஜூலியஸ் அற்புதராயன், சிங்காரவேலு மற்றும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பணிமனை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.