கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான பக்தா்கள் தங்கும் விடுதியான யாத்ரி நிவாஸ் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
தளா்வுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து அறிவுறுத்தலின்படி கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் தலைமையில் தன்வந்திரி ஹோமம், சுதா்சன ஹோமம் நடத்தப்பட்டு தங்கம் விடுதி திறக்கப்பட்டது.
கோயில் உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன்,அறங்காவலா்கள் டாக்டா் கே.என். சீனிவாசன், கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.