திருவானைக்காவில் முன்விரோதத் தகராறில் டீக்கடை காரருக்கு கத்திக் குத்து விழுந்தது.
திருவானைக்கா சன்னதி வீதியில் டீக்கடை வைத்துள்ளவா் மணிவேல் (48). இவருக்கும் தாகூா் தெருவில் வசிக்கும் ராஜாவுக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை டீக்கடையில் இருந்த மணிவேலை தனது நண்பருடன் வந்த ராஜா மிரட்டி கத்தியால் குத்தினாா். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.