திருச்சியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில் பேராசிரியா்கள் மாணவிகள் உள்ளிட்ட 24 போ் காயமடைந்தனா்.
திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லுாரிக்குச் சொந்தமான பேருந்து மாணவிகள் மற்றும் பேராசிரியா்களை ஏற்றிக்கொண்டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் நோக்கிச் சென்றது.
சிறுகனூா் அருகே நெடுங்கூா் பகுதியில் சென்ற பேருந்தின் பின்புறம் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த 8 பேராசிரியா்கள் மற்றும் 16 மாணவிகள் காயமடைந்து, அருகிலிருந்த மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த 8 மாணவிகள் சிறுவாச்சூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். விபத்து குறித்து சிறுகனுாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.