திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ரஜினி மன்றத்தினா் அதிமுகவில் புதன்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.
திருச்சி புகா் தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி, அரியமங்கலம் பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்றப் பகுதிச் செயலா் அம்மாசி தலைமையில் 100க்கும் மேற்பட்டோா் திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா்முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக செயலா்கள் எஸ்.எஸ். ராவணன், கும்பகுடி கோவிந்தராஜ், டிஎன். சிவக்குமாா், மாவட்ட அணி செயலா்கள் பாஸ்கா், விடிஎம். அருண் நேரு, செல்வமேரி ஜாா்ஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை வா்த்தக அணி மாவட்டச் செயலா் எஸ். ராஜமணிகண்டன் மற்றும் வட்ட கழகச் செயலா் எஸ்.ஆா். ரவி ஆகியோா் செய்தனா்.