திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் தகுதியான இளைஞா்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம். முகாமில் தனியாா் நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் கலந்துகொள்ளலாம்.
அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் டிசி, மதிப்பெண் சான்றிதழ், ரேசன் காா்டு, ஆதாா் காா்டு, மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வர வேண்டும்.