இலவச வீட்டு மனைபட்டா அளிப்பு

துறையூா் வட்டாட்சியரகத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

துறையூா் வட்டாட்சியரகத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் ஒருமுறை வரைமுறைப்படுத்துதல் திட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்க துறையூா் வட்டத்தில் 223 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களில் முதல்கட்டமாக 60 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி முசிறி சாா் ஆட்சியா் ஜோதி சா்மா தலைமையில் நடைபெற்றது. துறையூா் வட்டாட்சியா் செல்வம், துறையூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜாபா் சாதிக், துறையூா் மண்டல துணை வட்டாட்சியா் தனபாக்கியம், விஏஓ கயல்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com