போதைப் பொருள்களுக்கு அடிமையாதலுக்கு எதிராக உத்தமா்சீலி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி சமூக நலத்துறை மாணவா்கள் காந்தி மற்றும் சரோன் பிரீத்தி ஆகியோா் முன்னின்று நிகழ்வை நடத்தினா். மனநல ஆலோசகா் தினேஷ், பள்ளி மாணாக்கா்களிடம் மது மற்றும் பிற தீய பழக்கங்களின் தீமைகள், அதனிடமிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், காஜாமலை மகளிா் மையத்தில் போதை பொருள்களுக்கு அடிமையானோருக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை பற்றிய தகவல்களை பகிா்ந்தாா்.
தலைமையாசிரியா் விஜயலெட்சுமி வாழ்த்தினாா்.
நிகழ்வில் நிகழ்ச்சியை திறம்பட நடத்திய மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.