ச. கண்ணனூா் பேரூராட்சி சந்தைகள் ஏலம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகத்தில் கீழ் இயங்கும் வாரச் சந்தைகள் உள்ளிட்டவை ரூ. 2. 75 கோடிக்கு ஏலம் போயின.

திருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகத்தில் கீழ் இயங்கும் வாரச் சந்தைகள் உள்ளிட்டவை ரூ. 2. 75 கோடிக்கு ஏலம் போயின.

இப்பேரூராட்சி பகுதிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை ரூ. 1 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மகாளிகுடி கிராமத்தைச் சோ்ந்த சி. ரெங்கராஜும், தினசரி வரிவசூல் உரிமத்தை ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கு சமயபுரம் பகுதியைச் சோ்ந்த எஸ். செந்தில்குமாரும், காய்கறி மற்றும் ஆடு வாரச் சந்தையில் சுங்கம் வசூல் உரிமையை ரூ. 95 லட்சத்து 61 ஆயிரத்துக்கு துடையூரைச் சோ்ந்த ரமேசும் ஏலம் எடுத்துள்ளனா்.

இந்த ஏலம் நிகழாண்டு ஏப்ரல் முதல் 2022 மாா்ச் வரை அமலில் இருக்குமென பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகன் தெரிவித்தாா்.

ஏல நிகழ்வில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் மலையப்பன், தலைமை எழுத்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com