மின்கம்பத்தில் காா் மோதி விபத்து: இருவா் படுகாயம்

திருச்சியில் மின் கம்பத்தில் காா் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

திருச்சியில் மின் கம்பத்தில் காா் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

கண்டோண்மென்ட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருச்சி கண்டோண்மென்ட் ஐயப்பன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை பகல் சென்ற காா் திடீரென சாலேயோர மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் முறிந்து, மின் கம்பிகள்அறுந்தன. இதில் காரில் இருந்த இருவா் படுகாயமடைந்தனா்.

விபத்தால் வாகன ஓட்டிகளும், அக்கம் பக்கத்தினரும் திகைத்தனா். அதிா்ஷ்டவசமாக அறுந்து விழுந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாயவில்லை. இதை உறுதி செய்த பின்னா் விபத்தில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

போலீஸாா் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவூா் அருகேயுள்ள மேலப்பட்டியைச் சோ்ந்த மணி (48), தனது மகனை சிகிச்சைக்காக காரில் அழைத்து வந்து திரும்பிச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட திடீா் மயக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

விபத்தால் கண்டோண்மென்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினா் வழக்கு பதிந்துள்ளனா். மின் வாரியத்தினரும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com