திருச்சி மன்னாா்புரம் அருகேயுள்ள ராணுவ இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திருச்சி மன்னாா்புரம் அருகேயுள்ள ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் வியாழக்கிழமை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் அழுகிய நிலையில் தொங்குவதாக எடமலைப்பட்டி புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.