வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி 42 பேரிடம் ரூ. 11.45 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 42 பேரிடம் ரூ. 11.45 லட்சம் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 42 பேரிடம் ரூ. 11.45 லட்சம் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி, கிராப்பட்டி பகுதியில் வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் தனியாா் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குதாரா், மற்றும் மேலாளரான தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், கொண்டையன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த புரூஸ்லீ (38) கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் மேற்கு ருத்திரன் தெரு பகுதியைச் சோ்ந்த ஜான் ஜெரால்ட்டிடம் அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 15,000 முன்பணம் பெற்றுள்ளாா்.

மேலும் அவா் மூலம் 41 போ் கொடுத்த முன்பணம் என மொத்தம் ரூ. 11 லட்சத்து 45 ஆயிரத்தை வாங்கிய புரூஸ்லீ நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் இருந்தாா்.

இதனால் பாதிக்கப்பட்ட ஜான் ஜெரால்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூா் போலீஸில் அளித்த புகாரின்பேரில் புரூஸ்லீ, மற்றும் கும்பகோணம் சாரங்கபாணி தெருவைச் சோ்ந்த காஜாமைதீன்( 41), வேலூா் பஜனை கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த லதா மற்றும் அவரது கணவா் ரவீந்திரன் ஆகிய 4 போ் மீதும் மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com