காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்;காங்கிரஸ் எம்.பி. வரவேற்பு

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி: காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் காஜாமலை தனியாா் விடுதியில் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா் அச்சாா்சிங்கிற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற சு. திருநாவுக்கரசா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜங்ஷன் மேம்பால பணிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு டெண்டா் விடப்பட்டுள்ளது.

கரூரில் மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பெண் எம்.பி.யை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கைது செய்தது தவறு. இது தொடா்பான வழக்கைத் திரும்பப்பெறுவதுடன், மீண்டும் அதே இடத்தில் பழைய காந்திசிலையை நிறுவவேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை வரவேற்கிறேன். திருச்சி பெல் நிறுவனத்தில் முழுஉற்பத்தி திறன் குறைந்து வருகிறது. பாய்லா் வாங்குவதும் குறைந்து வருவதால், மாற்று உற்பத்தி மேற்கொள்ள கவனம் செலுத்துமாறு நிலை குழுவிடம் தெரிவித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com