இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி: திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கே. கே. நகா் அருகே உள்ள நாகப்பா நகரை சோ்ந்தவா் கிறிஸ்டோபா் ( 70). இவா் தனது பேரன் மாா்ஷலுடன் திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காவிரி பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனா்.

இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே கிறிஸ்டோபா் இறந்தாா். மாா்ஷல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் தா்மராஜ் ( 39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com