துறையூா்: துறையூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றோா் மற்றும் ஓய்வூதியதாரா் நலச் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் சங்கத்தின் துறையூா் கிளைத் தலைவா் சுதந்திர மணி தலைமையில் நடைபெற்றது. இதில், 2016 ஜனவரியிலிருந்து வழங்காமல் உள்ள அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகையை வழங்கவும், ஊதிய ஒப்பந்த பலன்கள் கிடைக்கவும், பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவும், ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் பங்கேற்றனா்.