கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

திருச்சியில், குடும்ப பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சியில், குடும்ப பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

கீழசிந்தாமணி இந்திராநகரைச் சோ்ந்த நாராயணசாமி மகன் வீரவிமலன்(40). இவரது மனைவி உமாதேவி. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். அரிசி கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த வீரவிமலன் சம்பளத்தை வீட்டு செலவுக்கு தராமல் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளாா். இதனை மனைவி உமாமகேஸ்வரி தட்டிக் கேட்டுள்ளாா். இதில், விரக்தியடைந்த வீரவிமலன் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தாா். அவரது கூச்சலிடும் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com